ஒரு போத்தல் டீசல் 600 ரூபாய், ஒரு போத்தல் பெற்றோல் 700 ரூபாய்..! எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரின் மகன் கைது, 187 லீற்றர் எரிபொருள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
ஒரு போத்தல் டீசல் 600 ரூபாய், ஒரு போத்தல் பெற்றோல் 700 ரூபாய்..! எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரின் மகன் கைது, 187 லீற்றர் எரிபொருள் மீட்பு..

பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் பிலியந்தலை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் 31 வயதுடைய அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பிலியந்தலை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மகன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து 180 லீற்றர் டீசல், 7 லீற்றர் பெற்றோல் மற்றும் எரிபொருளை எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர் டீசல் ஒரு போத்தல் 600 ரூபாவுக்கும், பெற்றோல் ஒரு போத்தல் 700 ரூபாவுக்கும் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு