14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மாமன்..! நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு..

ஆசிரியர் - Editor I
14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மாமன்..! நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு..

வவுனியாவில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் மாமனுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டணை மற்றும் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வவுனியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று உத்தரவிட்டுள்ளார். 

கடந்த (17.05.2017) அன்று வவுனியாவில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை தாயின் சகோதரர் (மாமா) மது போதையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், 

அதன் பின்னர் தான் கற்பமாகி கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் மன்றில் குறித்த சிறுமி சாட்சியம் அளித்துள்ளார். இச் சாட்சியத்தை ஒப்புதல் அளிக்கும் விதமாக வைத்திய கலாநிதி ஒருவரும் மன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.

குறித்த குற்றவாளிக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 5 லட்சம் ரூபா நஷ்டஈடும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன் தவறும் பட்சத்தில் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் 

10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும், கட்டத்தவறும் பட்சத்தில் 3 மாத சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு