சர்வதேச செஸ் தொடர்!! -தமிழகத்தின் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு தகுதி-

ஆசிரியர் - Editor II
சர்வதேச செஸ் தொடர்!! -தமிழகத்தின் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு தகுதி-

செசபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டி 9 தொடர்களாக நடத்தப்படுகிறது. இத் தொடரின் 4 ஆவது போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் விளையாடி வரும் சென்னையை சேர்ந்த 16 வயதான கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்செனை (நார்வே) வீழ்த்தியிருந்தார்.

இவர் அரை இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை சேர்ந்த நம்பர் ஒன் வீரரான அனிஷ்கிரியை எதிர்கொண்டார். இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்திய நேரப்படி இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு இந்தப் போட்டி நிறைவு பெற்றது. பிரக்ஞானந்தா இறுதிப் போட்டியில் சீனாவை சேர்ந்த டிங்லிரனை எதிர் கொள்கிறார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு