யாழ்.மாவட்டத்திற்கு 2 வாரங்களாக மண்ணெண்ணை விநியோகம் இல்லை! விநியோகம் கிடைத்தவுடன் பங்கீட்டு அட்டை முறையில் வழங்கப்படும்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திற்கு 2 வாரங்களாக மண்ணெண்ணை விநியோகம் இல்லை! விநியோகம் கிடைத்தவுடன் பங்கீட்டு அட்டை முறையில் வழங்கப்படும்...

யாழ்.மாவட்டத்திற்கு கடந்த 2 வாரங்களாக மண்ணெண்ணை விநியோகம் கிடைக்கவில்லை. என கூறியுள்ள யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் மண்ணெண்ணைக்கான கோரிக்கை அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், 

எமது மாவட்டத்திற்கான மண்ணெண்ணை விநியோகம் இல்லாமையால் கடற்றொழிலாளர்களும், விவசாயிகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கும் விடையத்தை தாம் அமைச்சு மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார். 

இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

கடந்த 2 வாரங்களாக எமது மாவட்டத்திற்கு மண்ணெண்ணை விநியோகம் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாவட்டத்திலுள்ள விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றார்கள். 

இந்த விடயத்தை அமைச்சுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் தொியப்படுத்தியுள்ளோம். இதனடிப்படையில் இந்த வாரம் ஒரு தொகுதி மண்ணெண்ணை வழங்கப்படும். என எமக்கு கூறப்பட்டிருக்கின்றது. 

அது கிடைக்கப் பெற்றதன் பின்னர் விவசாயிகள், கடற்றொழிலாளர்களுக்கு பங்கீட்டு அட்டை முறையில் மீனவர் சங்கங்களின் சிபார்சுடன் பகிர்ந்தளிக்கப்படும். என மாவட்டச் செயலர் மேலும் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு