குசல் மெண்டிசுக்கு திடீர் நெஞ்சு வலி!! -வைத்தியசாலையில் தொடர் கண்காணிப்பில்-

ஆசிரியர் - Editor II
குசல் மெண்டிசுக்கு திடீர் நெஞ்சு வலி!! -வைத்தியசாலையில் தொடர் கண்காணிப்பில்-

இலங்கைக்கும் பங்களாதே{க்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது நெஞ்சு வலியால் அவதிப்பட்ட குசல் மெண்டிஸ், டாக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு செய்யப்பட்ட ஈ.சி.ஜி பரிசோதனை அறிக்கை நேர்மறையாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குசல் மெண்டிஸின் அசௌகரியத்துக்கான காரணம் தசைப் பிடிப்பாக இருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும் குசல் மெண்டிஸ் தொடர்ந்தும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணி முகாமையாளர் மஹிந்த ஹலாங்கொட மேலும் தகவல் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு