யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் சிக்கினார்! பெருமளவு நகைகள், பணம் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் சிக்கினார்! பெருமளவு நகைகள், பணம் மீட்பு..

யாழ்.மாவட்டத்தில் 6 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த நபரை யாழ்.பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து பல்வேறு வகையான நகை கொள்ளையில் ஈடுபடும் நபர் தொடர்பாக கிடைத்திருந்த இரகசிய தகவல் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளபட்ட விசாரணைகளில் யாழ்.மாவட்டத்தில் 2021,2022 காலப்பகுதியில் ஆறு வீடுகளில் களவாடிய தங்க நகைகள் மற்றும் பணம் கைப்பற்றபட்டுள்ளது. 

மேலும் கைது செய்யப்பட்டவர் அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தொிவிக்கப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு