கட்டுப்பாடற்ற வேகம்..! மரம் மீது மோதிய பட்டா வாகனம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம்..! மரம் மீது மோதிய பட்டா வாகனம்..

வேக கட்டுப்பாட்டை இழந்த பட்டா வாகனம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் கிளிநொச்சி - புளியம்பொக்கணை பகுதியில் இன்று இடம்பெற்றிருக்கின்றது. 

புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கப்ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து மரத்துடன் மோதியுள்ளது. 

சம்பவத்தில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைத்த நிலையில் 

சிகிச்சைக்காக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் விசாரணைகளை நடத்தினர்.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு