யாழ்.மாநகரசபையை கலைப்பேன் என நான் கூறினேனா? அப்படி எதுவும் கூறவில்லை என்கிறார் ஆளுநர் ஜீவன் தியாகராஜா..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையை கலைப்பேன் என நான் கூறினேனா? அப்படி எதுவும் கூறவில்லை என்கிறார் ஆளுநர் ஜீவன் தியாகராஜா..

யாழ்.ஆரியகுளத்தில் வெசாக் கூடுகளை கட்டுவதற்கு அனுமதி மறுத்தால் யாழ்.மாநகரசபையை கலைப்பேன் என நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. என ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். 

நேற்றய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வடமாகாண ஆளுநரிடம் மேற்படி விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு கூறினார். 

மேலும் யாழ்.மாநகர சபை விடயம் தொடர்பில் நான் தற்போது பேச விரும்பவில்லை எனினும் நான் மாநகர சபையை கலைப்பதாக யாரிடமும் கூறவில்லை. 

எனவே அந்த விடயம் தொடர்பில் நான் பேச வேண்டிய தேவையும் இல்லை எனவும் தெரிவித்தார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு