தந்தை பாதுகாப்பாக, பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்..! நாட்டைவிட்டு ஓடவுமில்லை, ஓடப்போவதுமில்லை..

ஆசிரியர் - Editor I
தந்தை பாதுகாப்பாக, பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்..! நாட்டைவிட்டு ஓடவுமில்லை, ஓடப்போவதுமில்லை..

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்கள் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து உருவான வன்முறை சம்பவங்களினால் தனது பதவியை இராஜினாமா செய்துள்ள எனது தந்தை, 

இலங்கையிலிருந்து வெளியேறவுமில்லை, வெளியேறவும்மாட்டார். மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தொிவிக்கையில் கூறியிருக்கின்றார். 

அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது, திங்கட்கிழமை இரவு மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஆத்திரமடைந்த மக்கள் முற்றுகையிட்டதையடுத்து, இன்று அதிகாலை இராணுவத்தினரால் அவர் வெளியேற்றப்பட்டார்.

“நாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் உள்ளன. நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்," எமது குடும்பத்திற்கு எதிரான போக்கால் மோசமான இழுக்கை சந்தித்துள்ளோம் என நாமல் விவரித்தார்.

மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும், தனக்குப் பின்வருபவரைத் தெரிவு செய்வதில் தீவிரப் பங்கு வகிக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தலைநகர் கொழும்பில் உள்ள மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் வேலியை உடைத்து தாக்குதல் நடத்தியதையடுத்து 

அவர் அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்."எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார், அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார், அவர் குடும்பத்துடன் தொடர்பு கொள்கிறார்" என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு