அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 20ற்கும் மேற்பட்டோரின் வீடுகள், சொத்துக்கள் தீக்கிரை..! பற்றி எரிந்துகொண்டிருக்கும் நாடு..

ஆசிரியர் - Editor I
அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 20ற்கும் மேற்பட்டோரின் வீடுகள், சொத்துக்கள் தீக்கிரை..! பற்றி எரிந்துகொண்டிருக்கும் நாடு..

நாடு முழுவதும் அமைச்சர்கள், மற்றும் அரசுக்கு ஆதரவான முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை தவிசாளர்கள் உட்பட சுமார் 20ற்கும் மேற்பட்டவர்களுடைய வீடுகள், வர்த்தக நிலையங்கள், கட்சி அலுவலகங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக பிராமரின் இரு வீடுகள் மற்றும் விமல் வீரசங்ச, ஹெகலிய ரம்புக்வெல, பந்துல குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட சுமார் 20 பேருக்கும் மேற்பட்டோருடைய சொத்துக்கள் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களால் தீயிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றது. 

நேற்று நள்ளிரவு தாண்டியும் அடங்காத ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசுக்கு ஆதரவானோர் தொடர்பில் தேடி தேடி அலைந்து அவர்களுடைய சொத்துக்களை அழித்துள்ளனர். கண்டி, குருநாகல், மாத்தறை, புத்தளம், கொழும்பு, உள்ளிட்ட நாட்டின் சகல பாகங்களிலும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு