மீண்டும் இராஜினாமா செய்தாராம் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய..! அரசியல் கோமாளி என சமூக வலைத்தளங்களில் விமர்சனம்..

ஆசிரியர் - Editor I
மீண்டும் இராஜினாமா செய்தாராம் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய..! அரசியல் கோமாளி என சமூக வலைத்தளங்களில் விமர்சனம்..

நாடாளுமன்றில் அதிகபடியான வாக்குகளை பெற்று நேற்றுமுன்தினம் பிரதி சபாநாயகராக பதவியேற்ற ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று மீண்டும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருந்திருந்தார்.

இதனையடுத்து நேற்றுமுன்தினம் பாராளுமன்றில் புதிய பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்த நிலையில் 

அதில் 148 வாக்குகளை பெற்று மீண்டும் பிரதி சபாநாயகராக அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரசியல் கோமாளி என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு