யாழ்.தெல்லிப்பழையில் வீடுபுகுந்த கொள்ளை கும்பல்..! மூதாட்டி கண்டு கூச்சலிட்டதால் சரமாரி வாள்வெட்டு, இன்று அதிகாலை பயங்கரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழையில் வீடுபுகுந்த கொள்ளை கும்பல்..! மூதாட்டி கண்டு கூச்சலிட்டதால் சரமாரி வாள்வெட்டு, இன்று அதிகாலை பயங்கரம்..

வீட்டுக்குள் கொள்ளை கும்பல் நுழைந்ததை அவதானித்த மூதாட்டி சத்தமிட்ட நிலையில் மூதாட்டி மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் தெல்லிப்பழை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் படுகாயமடைந்த மூதாட்டி அயலவர்களால் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவத்தில் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு