எல்.பி.எல் போட்டித் தலைவர் பதவி விலகினார்!!

ஆசிரியர் - Editor II
எல்.பி.எல் போட்டித் தலைவர் பதவி விலகினார்!!

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) ரி-20 கிரிக்கெட் தொடரின் இயக்குனரான ரவீன் விக்கிரமரட்ன அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இவ்வாண்டுக்கான மூன்றாவது லங்கா பிரீமியர் லீக் ரி-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே ரவீன் போட்டித் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சமந்த தொடங்வெல நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு