பிரதமர் பதவியை கையளிக்கும் அறிவிப்பை மஹிந்த இன்று வெளியிடுவாரா..? ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள இன்றைய நாள்..

ஆசிரியர் - Editor I
பிரதமர் பதவியை கையளிக்கும் அறிவிப்பை மஹிந்த இன்று வெளியிடுவாரா..? ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள இன்றைய நாள்..

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று நாடாளுமன்றில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாகவும் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களிடம் பதவியை கையளிக்க தயாராக இருப்பதை அறிவிப்பார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

புதிய பிரதமர் நியமனம் செய்யப்படும் வரை தானே பிரதமராக இருப்பாரென அவர் அறிவிப்பாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. நாடு மேலும் பாதாளத்துக்கு செல்வதனை தடுப்பதற்காக, புதிய பிரதமர் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் 

பதவி விலகப் போவதில்லையென மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் கூற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு