யாழ்.வேலணை ஊடாக இந்தியாவுக்கு செல்வதற்கு முயற்சித்த 4பேர் கடற்படையினால் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வேலணை ஊடாக இந்தியாவுக்கு செல்வதற்கு முயற்சித்த 4பேர் கடற்படையினால் கைது..!

யாழ்.வேலணை ஊடக தமிழகம் செல்ல முயற்சித்த 4பேர் இன்று அதிகாலை கடற்படையினரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் அகதிகளது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தவகையில் யாழ்.வேலணை - வென்புரி ஊடாக தமிழகம் செல்ல முயன்ற வவுனியாவைச் சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட நால்வரே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு