யாழ்.கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்து..! 31 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்து..! 31 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு...

யாழ்.கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த கப் வாகனமும் யாழ்.நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த கொடிகாமம் - கச்சாய் வீதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் நிலாந்தன் வயது(31) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு