காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், பேரன், மருமகனை தேடி அலைந்த தாய் கடைசிவரை காணாமலேயே உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், பேரன், மருமகனை தேடி அலைந்த தாய் கடைசிவரை காணாமலேயே உயிரிழப்பு..!

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரையும் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று இரவு மரணமடைந்துள்ளார். 

வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியை சேர்ந்த செல்லையா செல்வராணி (வயது 75) என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார். 

 இவரது மகன்- தங்கராசா தயாபரன் (வயது 41) , மருமகன்- தம்பு தியாகராசா (வயது 56), பேரன்- தியாகராசா மனோகரன் (வயது 31) ஆகிய மூவரும்,

 கடந்த 2008 ஆம் ஆண்டு செட்டிகுளத்தில் விறகு வெட்ட சென்றபோது இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

அவர்களைத்தேடி வவுனியாவில் கடந்த 1898 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு 

தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரையும் கண்டுபிடித்து தர போராடியிருந்தார். இந்நிலையில் மூவரையும் காணாமலேயே அவர் நேற்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு