சங்கிலி திருடியவர்கள் மற்றும் திருடிய சங்கிலியை பணம் கொடுத்து வாங்கியவர்கள் உட்பட 4 பேர் கைது..!

ஆசிரியர் - Editor I
சங்கிலி திருடியவர்கள் மற்றும் திருடிய சங்கிலியை பணம் கொடுத்து வாங்கியவர்கள் உட்பட 4 பேர் கைது..!

இருவேறு இடங்களில் இடம்பெற்ற சங்கிலி திருட்டு சம்பவங்கள் தொடர்பில் இருவரை புலானாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிற்கு அமைவாக சங்கிலியை விலைக்கு வாங்கிய இருவரும் தருமபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நான்கு பேரும் இன்றைய தினம் (30.04.2022) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். 

இதன்போது குறித்த நால்வரையும் ஏழு நாட்களுக்கு ( 07.05.2022) தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு