யாழ்ப்பாணத்தில் பதுக்கல் வியாபாரிக்கு நடந்த தரமான சம்பவம்..! எரிவாயு சிலின்டர்கள், தீப்பெட்டிகள் மீட்பு, வழக்கும் பதிவு...

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் பதுக்கல் வியாபாரிக்கு நடந்த தரமான சம்பவம்..! எரிவாயு சிலின்டர்கள், தீப்பெட்டிகள் மீட்பு, வழக்கும் பதிவு...

யாழ்ப்பாணத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் மற்றும் தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்திருந்ததுடன், அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. 

குறித்த வர்த்தகர் தொடர்பாக பாவனையாளர் ஒருவர் பாவனையாளர் அதிகாரசபைக்கு வழங்கிய முறைப்பாட்டில் அடிப்படையில் பொலிஸாரின் துணையுடன் பாவனையாளர் அதிகாரசபையினர் நடத்திய முற்றுகை சோதனையின்போது, 

பதுக்கி வைக்கப்பட்டதுடன் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட தீப்பெட்டிகள் மற்றும் சமையல் எரிவாயு சிலின்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் பாவனையாளர்களுக்கு உரிய விலைக்கு வழங்கப்பட்டதுடன், 

பதுக்கல் வர்த்தகர் மீது வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் எரிவாயுவினை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்திருத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது 

சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என்பதனை வர்த்தகர்களுக்கு பாவனையாளர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு