பிணை கேட்டு பொலிஸ் நிலையம் சென்ற பெண்!! -மசாஜ் செய்ய வைத்த 'மஜா' பொலிஸ்-

ஆசிரியர் - Editor II
பிணை கேட்டு பொலிஸ் நிலையம் சென்ற பெண்!! -மசாஜ் செய்ய வைத்த 'மஜா' பொலிஸ்-

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது மகனை பிணையின் விடுவிக்க கோரி வந்த பெண்ணை பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது உடலை மசாஜ் செய்ய வைத்த சம்பவம் பீகாரில் பதிவாகியுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து, சம்மந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி உடனடியாகவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள தஹர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது மகனை விடுவிக்கும் படி, அவரது அம்மா பொலிஸ் நிலையம் சென்று கேட்டுள்ளார். 

அப்போது பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி அந்த பெண்ணிடம் கடுகு எண்ணையை கொடுத்து தனக்கு மசாஜ் செய்ய கூறி உள்ளார். மேலும் தனது சட்டை மற்றும் பனியனை கழற்றி மேலாடை அணியாமல் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு அமர்ந்துள்ளார். மகனை வெளிக் கொண்டு வர வேறு வழி தெரியாத அந்த பெண்ணும், அந்த அதிகாரிக்கு மசாஜ் செய்துள்ளார்.

இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ள மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் குறித்த பொலிஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு