மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது கப் வாகனம் மோதி கோர விபத்து..! யாழ்.வடமராட்சி கிழக்கை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு...

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது கப் வாகனம் மோதி கோர விபத்து..! யாழ்.வடமராட்சி கிழக்கை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு...

கிளிநொச்சி - பளை புதுக்காட்டு சந்தியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

புதுகாட்டுச்சந்தியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை மருதங்கேணி இருந்து புதுகாட்டு நோக்கி வந்து கொண்டிருந்த கப் ரக வாகனம் மோதியுள்ளது.

இதில் உடுத்துறை வடக்கு தாளையடியை சேர்ந்த நாகேந்திரன் ஜெகன் என்பவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவத்தையடுத்து விபத்து இடம்பெற்ற பகுதியில் சற்று நேரம் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு