யாழ்.மாவட்டத்தில் விற்றுத் தீர்ந்த எரிபொருள்..! 4 மாதத்தில் மட்டும் 1 கோடியே 26 லட்சம் லீற்றர் டீசல், ஒரு கோடியே 28 லட்சம் லீற்றர் பெற்றோல் விற்பனை...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் விற்றுத் தீர்ந்த எரிபொருள்..! 4 மாதத்தில் மட்டும் 1 கோடியே 26 லட்சம் லீற்றர் டீசல், ஒரு கோடியே 28 லட்சம் லீற்றர் பெற்றோல் விற்பனை...

யாழ்.மாவட்டத்தில் இவ்வருடம் 4 மாதங்களில் ம்டும் 1 கோடியே 26 லட்சத்து 75 ஆயிரம் லீற்றர் டீசல் விநியோகம் இடம்பெற்றுள்ளது. 

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் மத்தியிலும் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றே வருகின்றது. 

மாவட்டத்திலுள்ள அனுமதி பெற்ற 45 எரிபொருள் விற்பனை நிலையத்திற்கும் ஐனவரி முதல் ஏப்பிரல் மாதம் வரை விநியோகம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிக்கையின் பிரகாரம் இந்தக் காலத்தில் டீசல் சாதாரணம் மற்றும் சுப்ப டீசலாக ஒரு கோடியே 26 லட்சத்து 75 ஆயிரத்து 100 லீற்றரும், 

மண்ணெண்ணை 66 லட்சத்து 92 ஆயிரத்து 400 லீற்றரும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் ஒரு கோடியே 28 லட்சத்து 7 ஆயிரத்து 300 லீற்றர் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனை அனைத்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தரவுகள் லங்கா ஐ.ஓ.சி தரவுகள் இதில் அடங்கவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு