யாழ்.தெல்லிப்பழை - அம்பனையில் கோர விபத்து..! 22 வயது இளைஞன் தனது பிறந்தநாள் அன்றே உயிரிழந்த சோகம், மேலும் ஒருவர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை - அம்பனையில் கோர விபத்து..! 22 வயது இளைஞன் தனது பிறந்தநாள் அன்றே உயிரிழந்த சோகம், மேலும் ஒருவர் படுகாயம்...

யாழ்.தெல்லிப்பழை - அம்பனை பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 22 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் அராலி - வல்லை வீதியில் நேற்றய தினம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மாவிட்டபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் நிக்சன் (வயது 22) எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார். 

அவருடன் பயணித்த ரவிகரன் கனிஸ்டன் (வயது 20) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞனின் பிறந்தநாள் நேற்றைய தினமாகும். 

இருவரும் மோட்டார் சைக்கிளில் அராலி - வல்லை வீதியில் பயணித்த வேளை, தெல்லிப்பழை அம்பனை சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த வேலி தூணுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

 சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு