எந்தவொரு கஷ்ட பிரதேசங்களிலும் கடமையாற்றாத 47 அதிபர்கள் யாழ்.கல்வி வலயத்திற்குள் குந்தியிருப்பு..! அரசியல், செல்வாக்கு..

ஆசிரியர் - Editor I
எந்தவொரு கஷ்ட பிரதேசங்களிலும் கடமையாற்றாத 47 அதிபர்கள் யாழ்.கல்வி வலயத்திற்குள் குந்தியிருப்பு..! அரசியல், செல்வாக்கு..

யாழ்.கல்வி வலயத்தில் ஆசிரியர் நியமனத்தின்போதும், அதிபர் நியமனத்தின்போதும் இதுவரை வெளி மாவட்டம் செல்லாத 47 அதிபர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தீவகம் தவிர்ந்த யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் ஆகிய வலயங்களிலே குறித்த அதிபர்கள் கடமையாற்றுகின்றனர். இவ்வாறான நிலையில் தற்போது முதற்கட்டமாக 27 அதிபர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்படவுள்ள நிலையில் 27 பேரும் மேல்முறையீடு செய்திரப்பதாக அறியவருகிறது.

இவ்வளவு காலமும் அரசியல் செல்வாக்கு அதிகாரிகளின் செல்வாக்கு என்பவற்றை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறாத குறித்த 47 பேரும் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிலும் யாழ்ப்பாண ஊடகத்துறையில் முக்கிய இடத்திலுள்ள ஒரு பத்திரிகை ஆசிரியரின் நெருங்கிய உறவினர் ஒருவரும் உள்ளடங்குவதாக இடமாற்றத்துக்கு விண்ணப்பித்த அதிபர் தரப்புக்களால் கூறப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரனைத் தொடர்பு கொண்டபோது தாம் அதிபர் இடமாற்றத்தில் உறுதியாக இருப்பதாகவும் சரியான மருத்துவ அறிக்கை வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் மட்டுமே பரிசீலிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு