வீடு புகுந்து வாள்களை காட்டி அச்சுறுத்தி தொடர் கொள்ளை..! பெண் உட்பட 6 பேர் கொண்ட வன்முறை கும்பல் சிக்கியது...

ஆசிரியர் - Editor I
வீடு புகுந்து வாள்களை காட்டி அச்சுறுத்தி தொடர் கொள்ளை..! பெண் உட்பட 6 பேர் கொண்ட வன்முறை கும்பல் சிக்கியது...

தொடர்ச்சியான கொள்ளை சம்பவங்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட வன்முறை கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், வன்முறை கும்பலிடமிருந்து வாள்கள் மற்றும் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் நேற்றுமுன்தினம் (20) மூவரையும் நேற்று (21) மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கடந்த 16 ஆம் திகதி தேவிபுரம் பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தி வயோதிப தம்பதிகளை காயப்படுத்திவிட்டு தாலியினை கொள்ளையடித்து சென்றுள்ளமை மற்றும் விசுவமடு பகுதியில் செயின் அறுப்பு, 

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் நகை கொள்ளை மற்றும் வாள்வெட்டுத்தாக்குதல் போன்றவற்றில் குறித்த குழுவுக்கு தொடர்புள்ளதாக பொலிஸார் சந்தேகிச்சின்றனர். 

இளம் வயதினையுடைய கொள்ளைக்கும்பலை சேர்ந்தவர்கள் வாள் கொண்டு தனிமையில் வீடுகளில் இருக்கும் வயோதிபர்களை அடையாளம் கண்டு மிரட்டி தாக்குதல் நடத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் முழங்காவில் பகுதியினை சேர்ந்த ஒருவரும், முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியினை சேர்ந்த ஒருவரும், மற்றையவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடிவருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

திருட்டு பொருட்கள் விற்பனையினை மேற்கொண்ட பெண் ஒருவர் உள்ளிட்ட ஆறு பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் சான்றுபொருட்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு