வீட்டிலிருந்து வெளியே சென்று நீண்டநேரமாக வீடு திரும்பாத சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I
வீட்டிலிருந்து வெளியே சென்று நீண்டநேரமாக வீடு திரும்பாத சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!

வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுவன் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான். 

குறித்த சம்பவம் வவுனியா - கல்நாட்டிய குளம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. 10 வயதான சாந்தன் என்ற சிறுவன் நேற்றுமுன்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறான். 

எனினும் அவன் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் அவனை தேடிய நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு அண்மையில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றான். 

சடலத்தை மீட்டுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு