நாட்டிலிருந்து வெளியேறினாரா பஸில்..? சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்...

ஆசிரியர் - Editor I
நாட்டிலிருந்து வெளியேறினாரா பஸில்..? சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்...

கொவிட் -19 தொற்றுக்குள்ளானதாக கூறப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக சிங்கள இணைய ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரத்மலானை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த N 750 GF தனியார் ஜெட் விமானத்திலேயே அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை 10.40 மணிக்கு பெசில் சென்ற விமானம் டுபாய்க்குப் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தற்போது இலங்கையில் இருந்து டுபாய்க்கு விமானங்கள் இல்லாத காலம் இது என்று விமானிகள் கூறுகின்றனர்.

தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக பொய்யை பரப்பிய பசில் லங்கா மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்தார் எனவும் தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு