ஜ.பி.எல் தொடருக்குள் புகுந்தது கொரோனா!! -டெல்லி கேபிடல்ஸ் அணி வீரருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor II
ஜ.பி.எல் தொடருக்குள் புகுந்தது கொரோனா!! -டெல்லி கேபிடல்ஸ் அணி வீரருக்கு தொற்று-

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் ரி-20 தொடரில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இத் தொடரில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் மற்றும் அணியின் சக பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பயோ - பபிள் முறையில் உள்ளனர். இந்நிலையில் ஐ.பி.எல் அணியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிசியோ பேட்ரிக் பார்ஹார்ட்-க்கு இன்று வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது டெல்லி அணியின் மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று ஐ.பி.எல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அனைவரும் பயோ பபிளில் இருப்பதால் மற்ற வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி அணி தங்கள் அடுத்த போட்டியில் பெங்களூரு அணியை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு