யாழ்ப்பாணத்திலிருந்து சென்று பற்றைக்குள் பதுங்கியிருந்த 4 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து சென்று பற்றைக்குள் பதுங்கியிருந்த 4 பேர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்து மூலம் மட்டக்களப்புக்கு கஞ்சா கடத்திச் சென்றிருந்த 4 பேர் சந்திவெளி பகுதியில் பற்றை ஒன்றுக்குள் கஞ்சா பொதி செய்துகொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.பளை பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேர் எனவும்,  165 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாகவும் சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து 

சம்பவ தினமான நேற்றுமுன்தினம் மாலை குறித்த பற்றை காடு பகுதியை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். இதன்போது கேரளா கஞ்சாவை விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த 4 பேரை 

165 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்தனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் பளை இத்தாவில் பகுதியைச் சேர்ந்த 29,24,24,25 வயதுடையவர்கள் ஆவர்.நால்வரும் கஞ்சாவை பொதி செய்யும்போது 

கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு