தவான், ராஜபக்ச அதிரடி!! -பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப்-

ஆசிரியர் - Editor II
தவான், ராஜபக்ச அதிரடி!! -பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப்-

தவான், ராஜபக்ச அசத்தல் ஆட்டத்தால் பெங்களூர் அணியின் இமாலய இலக்கை அடைந்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் ரி-20 தொடரின் 3 ஆவது போட்டி மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,  பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. நாணய சுழல்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை குவித்தது. கேப்டன் டூ பிளசிஸ், 57 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர் உள்பட 88 ஓட்டங்களை விளாசினார். விராட் கோலி 41 ஓட்டங்களை அடித்தார். பானுக ராஜபக்ச 43 ஓட்டங்களை பெற்றார்.

206 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால், ஷிகர் தவான் இறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர்.

முதல் விக்கெட்டுக்கு 71 ஓட்டங்களை சேர்த்த நிலையில், அகர்வால் 32 ஓட்டங்களுடன் அவுட்டானார். ஷிகர் தவான் 43 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து இறங்கிய பானுகா ராஜபக்ச 43 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ராஜ் பாவா டக் அவுட்டானார். லிவிங்ஸ்டோன் 19 ஓட்டங்களில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் ஒடியன் ஸ்மித், ஷாருக் கான் அதிரடி காட்டினர். இறுதியில், பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது.

  

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு