பெண் ஒருவர் தனிமையில் இருந்தபோது வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து ரவுடிகள் அட்டகாசம்..!

ஆசிரியர் - Editor I
பெண் ஒருவர் தனிமையில் இருந்தபோது வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து ரவுடிகள் அட்டகாசம்..!

பெண் ஒருவர் மட்டும் தனிமையில் இருந்த வீட்டிற்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டிலிருந்த பெண் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். 

குறித்த சம்பவம் வவுனியா - வேப்பங்குளம் 7ம் ஒழுங்கை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கணவன் வேலைக்கும், 

பிள்ளைகள் பாடசாலைக்கும் சென்ற நிலையில் பெண் மட்டும் வீட்டில் சமைத்துக் கொண்டு நின்றுள்ளார். இதன்போது கார் ஒன்றில் வாள்களுடன் சென்ற இளைஞர் குழுவொன்று குறித்த வீட்டின் யன்னல், கதவு, கதிரைகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், 

பெண்ணையும் தாக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து தப்பியோடிய பெண் அருகில் இருந்த கடைக்குள் நுழைந்துள்ளார். பின்தொடர்ந்து சென்ற இளைஞர் குழு, கணவன் எங்கே எனக் கேட்டு அச்சுறுத்தல் விடுத்துவிட்டு 

அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிஸார் தாக்குதல் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டதுடன் 

தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு