பாடசாலைக்குள் புகுந்து ஆங்கில பாட ஆசிரியர் மீது சரமாரி தாக்குதல்!

ஆசிரியர் - Editor I
பாடசாலைக்குள் புகுந்து ஆங்கில பாட ஆசிரியர் மீது சரமாரி தாக்குதல்!

பாடசாலைக்குள் புகுந்த வன்முறை குழு ஆங்கில பாட ஆசிரியர் ஒருவர் மீது சரமாரி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் செட்டிகுளம் - வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் நேற்று காலை இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (25.03) பாடசாலை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது 

காலை 8.40 மணியளவில் பாடசாலைக்குள் சென்ற குறித்த பாடசாலை மாணவன் ஒருவரின் தந்தை உள்ளிட்ட மூவர், 

பாடசாலை வளாகத்தில் நின்ற ஆங்கில பாட ஆசிரியரான எஸ்.சாந்தகுமார் (வயது- 45) என்பவர் மீது கட்டையினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மற்றைய ஆசிரியர்கள் இதனை அவதானித்ததும் அங்கிருந்து தப்பித்துச்சென்றுள்ளனர். தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் 

தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் சக ஆசிரியர்களின் உதவியுடன் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்கட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் பாடசாலையில் பழைய மாணவர்கள், 

ஆசிரியர்கள் ஒன்று கூடியுள்ளமையினால் பதட்டமான நிலமை நிலவியபோதும் பொலிஸார் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு