வீடு உடைத்துக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
வீடு உடைத்துக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது..!

புதுக்குடியிருப்பு - ரெட்பானா பகுதியில் வீடு உடைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

நேற்றுமுன்தினம் பட்டப்பகலில் வீடு உடைத்து பணம், நகை திருடப்பட்டதாக முறைப்பாடு தொிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் தர்மபுரம் பொலிஸாரின் உதவியுடன் 

சந்தேகநபர்களை தர்மபுரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

தற்போது சந்தேகநபர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு