இராணுவ புலனாய்வு பிரிவினால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் வெடிமருந்து வியாபாரி கைது..!

ஆசிரியர் - Editor I
இராணுவ புலனாய்வு பிரிவினால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் வெடிமருந்து வியாபாரி கைது..!

கிளிநொச்சி - பளை பகுதியில் அபாயகரமான வெடிபொருட்களை வெட்டி அதிலிருந்து வெடிமருந்தை விற்பனை செய்துவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பரந்தன் பகுதியில் 2021ம் அண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி இடம்பெற்ற வெடி விபத்தில் யுவராஜ் என்ற 25 வயது இளைஞன் உயிரிழந்திருந்தான். 

குறித்த இளைஞன் வெடிமருந்துகளை கைது செய்யப்பட்டுள்ள நபருக்கே வழங்கியுள்ள நிலையில் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் பின் அவர் தலைமறைவாகியுள்ளார். 

இந்நிலையில் 23/03/2022ம் திகதி இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து பளை பகுதியில் உள்ள வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டது. 

இதன்போது பெருமளவு வெடி பொருட்களுடன் சந்தேகநபர் கைதாகியுள்ளார். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு