சிறுமிக்கு மதுபானம் பருக்கி வன்புணர்வு!! -4 பேர் கொண்ட கும்பல் கைது-

ஆசிரியர் - Editor II
சிறுமிக்கு மதுபானம் பருக்கி வன்புணர்வு!! -4 பேர் கொண்ட கும்பல் கைது-

குஜராத்தில் பண்ணைக்கு சென்ற 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி மதுபானம் குடிக்க வைத்து 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். 

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் மலையடிவாரத்தில் பண்ணை ஒன்று உள்ளது.  இந்த பண்ணைக்கு தனது நண்பருடன் 17 வயது சிறுமி சென்றுள்ளார்.  அந்த பகுதியில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கட்டாயப்படுத்தி மதுபானம் குடிக்க வைத்தது. இதன்பின், கும்பலாக சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். 

இந்த சம்பவம் நடந்த பின்பு அந்த கும்பல் தப்பியோடி விட்டது. மயக்கமடைந்து கிடந்த சிறுமியை அயலில் இருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் குறித்த கும்பலை கைது செய்துள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு