காணாமல்போனதாக கூறப்பட்ட சிறுமிகள் மீட்பு! பேஸ்புக் காதலால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் பாலியல் துஷ்பிரயோம் செய்யப்பட்டதாக பரபரப்பு வாக்குமூலம்..

ஆசிரியர் - Editor I
காணாமல்போனதாக கூறப்பட்ட சிறுமிகள் மீட்பு! பேஸ்புக் காதலால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் பாலியல் துஷ்பிரயோம் செய்யப்பட்டதாக பரபரப்பு வாக்குமூலம்..

கடந்த 16ம் திகதி முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியை சேர்ந்த இரு சிறுமிகள் காணாமல்போனதாக கூறப்பட்ட நிலையில் குறித்த சிறுமிகள் இருவரும் மீட்கப்பட்டுள்ளதுடன், விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்களை குறித்த சிறுமிகள் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. 

காணாமல்போனதாக கூறப்பட்ட இருவரும் நேற்றுமுன்தினம் மாலை புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதிக்கு வந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டனர். சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது 

குறித்த சிறமிகளில் ஒருவர் பேஸ்புக் ஊடாக மட்டக்களப்பு செங்கலடிப்பகுதி இளைஞர் ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தி கதைத்து பேசியுள்ளார்கள். செங்கலடி இளைஞன் சிறுமியினை அங்கு வருமாறு அழைத்துள்ளதை தொடர்ந்து 

சிறுமி தனது நண்பியுடன் வீட்டிற்கு தெரியாமல் மிதிவண்டியில் மாலைநேர கல்விக்கு செல்வதாக சொல்லிவிட்டு மிதிவண்டியினை பற்றைக்காட்டிற்குள் போட்டுவிட்டு பேருந்தில் ஏறி மட்டக்களப்பு செங்கலடிக்கு சென்றுள்ளார்கள்.

செங்கலடி இளைஞன் இருவரையும் காரில் ஏற்றிசென்றுதான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து அவர்களை வீடுசெல்ல அழைத்துக்கொண்டுவந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளார்.

இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் சென்று யாழ் நகரப்பகுதியில் சுற்றிதிரிந்து கடை ஒன்றில் பொருட்களை வாங்கியவேளை நள்ளிரவாகியுள்ளது. இந்நிலையில் இரண்டு சிறுமிகளுக்கும் உதவிசெய்வதாக கூறி 

இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துக்கொண்டுசென்று வீடு ஒன்றில் தங்கவைத்து பின்னர் மற்றைய சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பேருந்தில் இரண்டு சிறுமிகளும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளார்கள்.

இரண்டு சிறுமிகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு இருவரும் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 

இருவரிடத்திலும் மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தினை தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகள் இருவருடனும் பாலியல் துஸ்பிரயோகத்தினை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு