தனியார் கல்வி நிலையம் சென்று வீடு திரும்பியபோது கடத்தப்பட்டு தப்பி ஓடிவந்த சிறுவன்..! பரபரப்பு வாக்குமூலத்தால் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
தனியார் கல்வி நிலையம் சென்று வீடு திரும்பியபோது கடத்தப்பட்டு தப்பி ஓடிவந்த சிறுவன்..! பரபரப்பு வாக்குமூலத்தால் பதற்றம்..

தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று வீடு திரும்பிய மாணவன் ஒருவனை வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று கடத்திச் சென்ற நிலையில் தப்பி ஓடிவந்துள்ளார். 

வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த குறித்த மாணவன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற சமயமே கடத்தப்பட்டுள்ளார். 

குறித்த சிறுவனின் கை, கால்களை கட்டி காட்டு பகுதிக்குள் கொண்டுசென்ற நிலையில் தப்பி ஓடிய மாணவன் அடி காயங்களுடன் உறவினர்களால் மீட்கப்பட்டு,

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளதுடன், 

தப்பி ஓடிவந்த மாணவன் தான் கடத்தப்பட்ட வாகனத்தில் மேலும் இரு சிறுவர்கள் கை, கால் கட்டப்பட்ட நிலையில் உள்ளதாக கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு