மாலை நேர தனியார் வகுப்புக்கு சென்ற 14 வயதான பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல்போயுள்ளனர்..! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
மாலை நேர தனியார் வகுப்புக்கு சென்ற 14 வயதான பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல்போயுள்ளனர்..! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

14 வயதான இரு பாடசாலை மாணவிகளை காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாணவிகள் இருவரும் நேற்று புதன்கிழமை மாலைநேர வகுப்பிற்காகச் சென்ற நிலையில் 

வீடு திரும்பவில்லை என பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு