யாழ்ப்பாணத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 75 கிலோ கஞ்சாவுடன் பெண் உட்பட 3 பேர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 75 கிலோ கஞ்சாவுடன் பெண் உட்பட 3 பேர் கைது..!

யாழ்ப்பாணத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 75 கிலோ கஞ்சாவுடன் பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் வவுனியா - ஓமந்தை சோதனை சாவடியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. ஓமந்தை இரானுவ சாவடியில் சந்தேகத்திடமான முறையில் பயணித்த வாகனத்தினை சோதனைக்குட்படுத்திய சமயத்தில் வாகனத்தின் பிற்பகுதியில் கேரளா கஞ்சாவினை கைப்பற்றினர். 

அதன் பின்னர் தொடர்ச்சியான சோதனையின்போது வாகனத்தின் ஆசனங்களின் கீழ்பகுதி போன்றவற்றிலிருந்து நான்கு கேரளா கஞ்சா பொதிகள் மீட்க்கப்பட்டன.

இதனையடுத்து வாகனத்தில் பயணித்த கண்டி, மேல்சிறிபுர, ஹசலக பகுதியினை சேர்ந்த பெண் உட்பட மூவரை இரானுவத்தினர் கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், 

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்ச , சந்தேகநபர்கள் ஆகியோரை ஓமந்தை பொலிஸாரிடம் இரானுவத்தினர் ஒப்படைத்தனர்.கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் 

யாழ்ப்பாணத்திலிருந்து குருநாகல் நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளமையுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் 

பொருட்கள் மற்றும் சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு