பட்டப் பகலில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் கதவுச் சட்டத்தால் பெண்ணை தாக்கி கொள்ளை..!

ஆசிரியர் - Editor I
பட்டப் பகலில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் கதவுச் சட்டத்தால் பெண்ணை தாக்கி கொள்ளை..!

பட்டப் பகலில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் வீட்டில் தனித்திருந்த பெண்ணை கதவு சட்டத்தால் அடித்து அவரிடமிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில், 

பெண் ஒருவர் மட்டும் வீட்டில் தனித்திருந்துள்ளார். இந்நிலையில் சடுதியாக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல், 

கதவுச் சட்டத்தினால் பெண்ணை தாக்கியதுடன் பெண் அணிந்திருந்த 2 பவுண் தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு