போரில் காயம் அடைந்த இராணுவ வீரர்கள்!! -வைத்தியசாலை சென்று நேரில் ஆறுதல் கூறிய உக்ரைன் ஜனாதிபதி-

ஆசிரியர் - Editor II
போரில் காயம் அடைந்த இராணுவ வீரர்கள்!! -வைத்தியசாலை சென்று நேரில் ஆறுதல் கூறிய உக்ரைன் ஜனாதிபதி-

உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி போரில் காயமடைந்த நிலையல் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

உக்ரைன் மீது ரஷியா படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இருதரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீரர்கள் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் இராணுவ வீரர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் அவர் காயம் அடைந்த வீரர்களுடன் செல்பி எடுத்து உற்சாகப்படுத்தினார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு