இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! வீதியில் விழுந்த முதியவர் மீது வாகனம் மோதியதில் முதியவர் பலி..

ஆசிரியர் - Editor I
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! வீதியில் விழுந்த முதியவர் மீது வாகனம் மோதியதில் முதியவர் பலி..

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் வீதியில் விழுந்த முதியவர் மீது மற்றொரு வாகனம் ஏறியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் வவுனியா - பாரதிபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. 

இரு மோட்டார் சைக்கிள்கள் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் வீதியில் விழுந்துள்ளார். 

இதனையடுத்து அப்பகுதியால் வந்த பிறிதொரு வாகனம் முதியவரின் தலையில் ஏறியுள்ளது. சம்பவத்தில் தலை நசுங்கி முதியவர் உயிரிழந்துள்ளார். 

முதியவரின் தலையால் ஏறிய வாகனம் அங்கிருந்து சென்றிருக்கின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை வீதியில் விழுந்த முதியவர் மீது இராணுவ வாகனமே ஏறியதாக சம்பவத்தை நோில் அவதானித்த பொதுமக்கள் கூறியிருக்கின்றனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு