மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மனைவியை மோதி தள்ளிய பருத்தித்துறைசாலை இ.போ.ச பேருந்து..! இருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மனைவியை மோதி தள்ளிய பருத்தித்துறைசாலை இ.போ.ச பேருந்து..! இருவர் படுகாயம்..

இ.போ.ச பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து முன்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மனைவியை மோதி தள்ளி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்தில் படுகாயமடைந்த கணவன், மனைவி பொதுமக்களால் மீட்கப்பட்டு தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேற்படி விபத்து சம்பவம் நேற்று பிற்பகல் விசுவமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. கல்முனை - பருத்தித்துறை வழி சேவையில் ஈடுபடும் பேருந்தே விபத்தினை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. 

மேலும் சம்பவத்தில் பிரமந்தனாறு பகுதியை சேர்ந்த கந்தையா சிவசுப்பிரமணியம் (வயது56) சிவசுப்பிரமணியம் மேகனாம்பிகா(வயது55) ஆகிய இருவரே படுகாயமடைந்திருக்கின்றனர். 

இந்த விபத்தினை தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பேருந்தின் சாரதி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவத்தினை தொடர்ந்து அங்கு கூடிய இளைஞர்கள் 

பேருந்தினை எடுக்கவிடாமல் முரணபட்ட நிலையில் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகி நிலமையினை கட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் விபத்து குறித்து தடையவியல் பொலிஸார் வரவளைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு 

விபத்தினை ஏற்படுத்திய பேருந்தும், விபத்திற்குள்ளான உந்துருளியும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு