A-9 வீதியில் தாயாருடன் சென்று கொண்டிருந்த சிறுவனை வாகனத்தில் வந்தவர்கள் கடத்திச் செல்வதற்கு முயற்சி..!

ஆசிரியர் - Editor I
A-9 வீதியில் தாயாருடன் சென்று கொண்டிருந்த சிறுவனை வாகனத்தில் வந்தவர்கள் கடத்திச் செல்வதற்கு முயற்சி..!

தாயாருடன் சென்று கொண்டிருந்த சிறுவனை வாகனத்தில் வந்த சிலர் கடத்த முயற்சித்ததாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் பளை - கரந்தாய் பகதியில் நேற்று(09) மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 

இனந்தெரியாத சிலர் கறுப்பு துணியால் முககவசம் அணிந்து வந்து, சிறுவன் ஒருவரை வெள்ளை நிற வாகனம் ஒன்றில் கடத்த முயன்றபோது காப்பாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் வீதியில் சென்றவர்கள் மடக்கிப்பிடிக்க முற்படுகையில், குறித்த வாகனம் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக பளை காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு