திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 17 வயது சிறுமி கர்ப்பவதி..! தாயின் 2வது கணவன் கைது..

ஆசிரியர் - Editor I
திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 17 வயது சிறுமி கர்ப்பவதி..! தாயின் 2வது கணவன் கைது..

17 வயதான சிறுமி ஒருவர் கர்ப்பவதியாக உள்ளமை கண்டறியப்பட்டிருக்கும் நிலையில் சிறுமியின் தாயுடன் 2வது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் வவுனியா - பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.கணவனை பிரிந்து வாழ்ந்த பெண் ஒருவர் 2 பிள்ளைகளுடன் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

குறித்த பெண் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணி நிமித்தம் சென்ற நிலையில் இரண்டு பிள்ளைகளும் தமது இளம் தந்தையுடன் வீட்டில் வசித்து வந்தனர். 

17 வயதுடைய சிறுமி ஆபத்தான நிலையில் பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கர்ப்பமாக காணப்பட்டுள்ளார். 

பொலிஸாரின் விசாரணையைத் தொடர்ந்து தாயின் இரண்டாவது கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

கைது செய்யப்பட்டவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை 

மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு