கொய்யா பழத்திற்கு ஆசைப்பட்ட 14 வயது சிறுமி பரிதாப மரணம்..!

ஆசிரியர் - Editor I
கொய்யா பழத்திற்கு ஆசைப்பட்ட 14 வயது சிறுமி பரிதாப மரணம்..!

கொய்யா பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய சிறுமி ஒருவர் மரத்திலிருந்து தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் மாங்குளம் புதிய கொலணி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் மகா வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்றும் 

தயாபரன் தர்மினி(வயது14) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். வீட்டு கிணற்றுக்கு அருகில் உள்ள கொய்யா மரத்தில் பழம் பறிப்பதற்காக ஏறிய நிலையில், 

தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு