காணி தகராறினால் உறவினர்களுக்கிடையில் வாள்வெட்டு! முதியவர் உட்பட 4 பேர் படுகாயம், 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
காணி தகராறினால் உறவினர்களுக்கிடையில் வாள்வெட்டு! முதியவர் உட்பட 4 பேர் படுகாயம், 3 பேர் கைது..

உறவினர்களுக்கிடையில் காணி தகராறினால் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குடும்ப உறவினர்கள் இரு பகுதியினருக்கு இடையில் நீண்டகாலம் காணிப்பிணக்கு இருந்துவந்துள்ள நிலையில் நேற்று 05.03.2022 இரவு கைகலப்பாக மாறியள்ளது.

இதன்போது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சம்பத்தினை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட ஒட்டுசுட்டான் பொலிஸார் மூன்று பேரை கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாரின் தலையீட்டினால் பாரிய வாள்வெட்டு சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் வாள்வெட்டிற்கு இலக்கான இரு பகுதியினை சேர்ந்த நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

வயோதிபர் ஒருவர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு