தறிகெட்டு ஓடிய பேருந்து மோதியதில் தந்தையும், மகனும் பலி..! பேருந்தை அடித்து நொருக்கிய மக்கள், அதிரடிப்படை குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள்...

ஆசிரியர் - Editor I
தறிகெட்டு ஓடிய பேருந்து மோதியதில் தந்தையும், மகனும் பலி..! பேருந்தை அடித்து நொருக்கிய மக்கள், அதிரடிப்படை குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள்...

வேக கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் வவுனியா - குருக்கள் புதுக்குளம் பகுதியில் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த கிராமமக்கள் ஒன்று திரண்டமையால் குறித்த பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டது.

வவுனியா குருக்கள் புதுக்குளம் பகுதியில் மன்னார் பறயநாலங்குளம் பிரதான வீதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.  

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து குருக்கள் புதுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது   உள் வீதியில் இருந்து பிரதானவீதிக்கு ஏறிய மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது. 

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகியதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் மரணமடைந்தார்.

விபத்தினையடைந்து ஆத்திரமடைந்த கிராமமக்கள் பேருந்தினை தாக்கியமை சேதப்படுத்தியதால் குறித்த பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பூவரசங்குளம் பொலிசார் நிலமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர் எனினும் அது பலனளிக்காத நிலையில் விசேட அதிரடிப்படையினர் களத்திற்கு அழைக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சம்பவத்தில் குருக்கள்புதுக்குளம் பகுதியை சேர்ந்த 46 வயதான பு.சிறிதரன் மற்றும் அவரது 14 வயது மகனான டினோகாந் ஆகிய இருவரே மரணமடைந்துள்ளனர். 

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு