உக்ரைனில் துறைமுக நகரை கைப்பற்றிய ரஷிய படை!!

ஆசிரியர் - Editor II
உக்ரைனில் துறைமுக நகரை கைப்பற்றிய ரஷிய படை!!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா படைகளின் தாக்குதல் இன்று சனிக்கிழமை 10 ஆவது நாளாக தொடர்கிறது. 

இந்நிலையில் உக்ரைனின் முக்கிய துறைமுக நகராக மரியுபோலை கைப்பற்ற ரஷியா இராணுவம் சில நாட்களுக்கு தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. கடல் வழியாக தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வந்தனர். மேலும் தரைப் படையும் அந்நகருக்குள் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் தீவிர தாக்குதலுக்கு பின் துறைமுக நகரான மரியுபோலை ரஷிய இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனை அந்த நகரின் மேயர் உறுதிப்படுத்தி உள்ளார்.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு