நாட்டிற்கு வந்த டக்ஸன் பியூஸ்லஸின் பூதவுடல்!! -திங்கள் மன்னாரில் அஞ்சலி-

ஆசிரியர் - Editor II
நாட்டிற்கு வந்த டக்ஸன் பியூஸ்லஸின் பூதவுடல்!! -திங்கள் மன்னாரில் அஞ்சலி-

மாலைத்தீவில் கடந்த மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் நேற்று புதன்கிழமை இரவு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது பூதவுடல் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பரிசோதனைகளின் பின்னர் பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படும். அதையடுத்து எதிர்வரும் 5 ஆம் திகதி மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படும்.

இந்தநிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை மன்னார் பொது மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு